திங்கள், 13 ஆகஸ்ட், 2012

என் பழைய கவிதைகள்

கவிதைகள்

தவம்
                                              தகிக்கும்
                                              தனலுக்குள்
                                              தனியாய்
                                              தவமிருக்கிறேன்
                                             சுடவில்லை நெருப்பு ! !
                                               ஏனில்
                                              என்னுள் நீ


உலா

நட்சத்திரங்களை  எல்லாம்
காவல் வைத்து விட்டு
நிலா உலா செல்வது போல. . .
என் உயிரை உன்னிடம்
காவல் வைத்து விட்டு - வெறும்
உடம்பாய் நானும்
உலா வருகிறேன்..


இம்முறை

                                அதே ஊர். . . தஞ்சை

                                அதே மணிமண்டபம்

                              அதே பெரிய கோவில்

                              உரசி. . . சிரித்து ... . . பேசி

                              மகிழ்ந்த அதே இருட்டு இடம்.

                            அங்கே கரியால் செதுக்கிய. . . நம் பெயர்

                            எல்லாம் அப்படியே இருந்தன. . . .

                                                                              இம்முறை நான் மட்டும் போன போது.

நினைவுண்டா . . ?

ஒரு நாள்,உன் தோளில்

நான் சாய்ந்து சாய்திருந்த வேளையில்,

நிலவை நீ காட்டி

‘நான் நிலவா ஸ்டோனி’ என
நீ கேட்க,

‘அது தேயும்’ என்று சொல்லி
நான் தேம்பியது எல்லாம்

உனக்கு நினைவுண்டா. . . . ?


தவிப்பு

உன் சிக்கில்லா கூந்தல்தனிலே
நான் சிக்கிக் கொண்டேனடி
என் சின்னவளே. . .
இறக்கி விடடி. . கூந்தலை விட்டு!
இல்லை
இறுக்கிக்கொள்ளடி கூந்தலுக்குள் விட்டு. . . .!!


சில நேரம்
    ‘உன்னைப் போய் யார் கட்டிக்கிவா ?’
         கை உதறிப் பொய்க் கோபம் . . .    சில நேரம்

    ‘கை விட்டிற மாட்டீயே!’
          கை பிடித்துக் கெஞ்சல்.                சில நேரம்

    கல்யாணத்திற்கு
அப்பாவெல்லாம் எதுக்கு?
வீரமாய். . . சில நேரம்

    ‘அப்பா கூட இல்லாமலா கல்யாணம்?’
விரல் சொடுக்கு எடுத்தபடி குழந்தையாய் . . சில நேரம்

    எனக்குத் தான்
புரியவில்லை! நீ
எந்த நேரம்
எப்படி இருப்பாய் என்று ?!!!

   
நினைவு

எனக்கு
தாகமெடுத்த போதெல்லாம்
நீரோடை போல் வந்தவளே . .
.சுதி தொpயாமலே - குயில்
ஜதி பாடுவது போல. . .
எனக்குத் தொpயாமலே
ஒரு நாளில்
அதிகமான நேரங்களில்
அதிகமாக நீ . .நீ மட்டுமே
என்னால்
நினைக்கப்படுகிறாய் .


அங்கிட்டு வந்தேன்

‘வாம்மா’னு அழைக்கும்
அந்த பு+க்காரக் கிழவி.

நம்மிருவரைப் பார்த்தவுடன்
சிரித்துக் கொண்டே ஓடிவரும்
அந்த பிச்சைக்கார சிறுமி

பிடித்திருந்த கையை உதறிவிட்டு விட்டு
கன்னத்தில் போட்டுக் கொள்ளும் அந்த
கருப்பண்ணசாமி கோயில..;. . .

‘அண்ணன் இருக்கானானு’
எட்டிப் பார்க்கும்
டீக்கடை சந்து

நின்று கொண்டிருந்த சிறுமிக்கு
உன் பொட்டு வைத்து    
அழகு பார்த்த அந்த ஐந்தாம் நம்பர் பேருந்து... . .

எப்போதும் போல்
வளைவு திரும்பும் போது
நீ திரும்பிப் பார்த்துக் கொண்டே. . . ச் . .
செல்லும் அந்த திருப்பம்

பைக்கில் போகும்
போகும் புதுமணத் தம்பதியினரைப் பார்த்து
மர்மமாக நீ சிரிச்ச
அந்த சாலையோர முக்கு. . .

அங்கிட்டு வந்தேன்
உன் திருமணத்திற்குப் பிறகு.. . .
‘ஏன்டா வந்தோம்னு’ஆயிடுச்சி.   



அலை

எனை போல்
உனை நோக்கியே ஓடி வரும்
அந்த அலைகளை
கண்ட பிறகும் கூடவா?
என் நினைவு
உன் கால் நனைக்கவில்லை. .

உண்மையைச் சொல் !
அலைகளின் நீரை
அள்ளி நீ குடித்த போது. . .
என் கண்ணீhpன்
உப்பு கரித்தா அன்பே?

துள்ளி வரும் அலைகளில் -என்
தும்மலின் (உனை நினைப்பதால் )
எச்சங்கள் எப்படி அங்கே
உனக்குத் தொpயப் போகிறது ?


வாயாடி

ஊடல் கொண்டிருந்த
நாட்களிலேயே -என்
தனிமை பொறுக்காதவள்.
கூடல் கொண்டிருந்த
நாட்களில் எப்படி?
அவள்!!?
அனேகமாய்
அந்த வாயாடி
இன்னேரம் ஊமையாகி
இருப்பாள்.


வள்ளல்

போர்த்திக் கொள்ளாது
என்று தொpந்தும்
மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
பேகன். . .
வள்ளல்களில் ஒருவன்
தாங்க மாட்டேன்
என்று தொpந்தும்
எனக்குத்
தனிமையைத் தந்தாள்
தலைவி. . .
தனிமையைத் தருவதில்
வள்ளல்களில் ஒருத்தி.!


பிரிவு

இது செயற்கை
பிரிவடி சிநேகிதி

வாள் கிழித்த தண்ணீர்
எத்தனை நேரம்
அப்படியே பிரிந்திருக்கும் !

சொல்! அப்படி தான் நம் பிரிவும்.

உன் மூடிய விழிகளைக்
கொஞ்சம் திறந்து பார் .....

உன் இமைகளின் அருகில்
நான் இமைக்காமல் இருப்பேன்.            


உன் நினைவு

எங்கே அமர்ந்தாலும்
எப்படியாவது
வந்து தொலைக்கிறது
உன் நினைவு. . . !
தினந்தோறும் வரும்
கந்து வட்டிக்காரனைப் போல... . .

அவள் சில நேரம்

    பட்டாம் பு+ச்சியாய்
       படபடத்த பேச்சு. . .

    சில நேரம்
      புத்தனாய் போதிப்பு . . .
.
    சில நேரம்
இயேசுவாய் அமைதி

    சில நேரம்
       மழைத்துளியாய் சிரிப்பு

    சில நேரம்
       மகானாய் சிந்திப்பு

    சில நேரம்
       காதலாய் கண்ணடிப்பு

    சில நேரம்
      காமமாய் பார்வை

    சில நேரம்  சிரிப்புடன் கூடிய முறுவல்
          சில நேரம்
         உற்சாகமாய் கையில் முத்தம்

    சில நேரம்
        கோபமாய் கன்னத்தில் இடிப்பு

    சில நேரம்;
     குழந்தையாய் மடியில் கண் மூடல்

    சில நேரம்
    புசொறுகும் மும்முரத்தில் ‘உம் உம்’கொட்டல்

    சில நேரம்
   ஆச்சிரியமாய். . .!!!
  ‘அய்யய்யோ. . . அப்புறம்’சொல்லும் அழகு. .

    சில நேரம்
   ‘உன்னை போய் யார் கட்டிக்குவா?’
    கேலி தொனித்த தொனி.

    சில நேரம்
   ‘டேய் கைவிட மாட்டியே. . .?’
    கை பிடித்து கண்ணீர்

    சில நேரம்
      ‘போடா’சொல்லும்
      பொய் கோபம்

    சில நேரம்
        ‘வாடா’கண் சுருக்கி வம்பிளுத்தல்

சில நேரம்
அவ்வப்போது நெஞ்சில்
புதையல் தேடல்

    சில நேரம்
        அவ்வப்போது முதுகில் பெயர் எழுதுதல்

    சில நேரம்
       கடுப்பாய் சில கடிதம்

    சில நேரம்
         கவிதையாய் பல கடிதம்

    சில நேரம்
       பனித்துளியாய் கண்ணீர் சிந்தல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக